அடிமை!

நல்வழி: யோவான் 8: 33-34.


யாருக்கும் அடிமை இல்லை என்று,

யாவரும் கூறும் பழக்கமுண்டு. 

பேருக்குப் பின்னால் சாதியும் போட்டு,

பெருமை காட்டும் வழக்கமுண்டு. 

நேருக்குந்நேராய் இறை முன் வந்தால்,

நெஞ்சின் அழுக்கு புரியவரும்.

ஊருக்குத் தெரியா அடிமைத்தனங்கள்

ஓடிட, விடுதலை தெரியவரும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

விடுதலை நாள் வாழ்த்து!

பதவி நாளில் எதையும் அள்ளும்

பண்பு கொண்ட பாரதம்,

உதவி நாடும் ஏழை எள்ளும்;

உண்மை தேடு, பார் அதம்.

இதனை இன்று எடாது தள்ளும்,

இந்தியர்கள் வாழ் விதம்,

மடமை என்று தான் கொள்ளும்.

மாபேரன்பு, வாழ் இதம்!

-செல்லையா.

அதம்= தாழ்வு

இதம் = இனிமை