என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.
நல்வழி:
என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,
எங்கும் நடத்தும், என் இறையே,
தன்னம் தனியே தள்ளவும் தடுத்து,
தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே.
இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;
இறைவழி காட்டிடும் திருமறையே.
சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,
சீராக்கட்டும் இவர் குறைவே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.