மதிக்கு நீதி கிடைக்குமா?

மதிக்கு நீதி கிடைக்குமா?

அழுது கொண்டே உயிர் விட்டாள்.

அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.

தொழுது கொண்டே தாய் கேட்டாள்.

தாய்க்கும் நீதி கிடைக்கவில்லை.

எழுதி வைக்கிற விதி என்பார்.

இங்கும் நீதி கிடைக்கவில்லை.

பழுது எங்கே? பகுத்தே பார்.

பாராவிடில், கிடைப்பதில்லை!

–செல்லையா.

யோவான் 8:41-42.

நல்வழி:


அன்பே இறைவன் என்று மொழிவார்;

ஆயினும் அன்பை அவர் பொழியார்.

தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;

தமது செயலால் மகன் பழிப்பார்.

இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,

இயேசுவோடு பிணைந்திடுவார்.

நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,

நலமிலா தீதும் களைந்திடுவார்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.