இயேசு யார்?

இயேசு யார்?


நற்செய்தி: யோவான் 8:25-27

நல்வழி:


என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,

என்னை ஆளும் ஏசுவே,

முன்னில் வந்து, கேளாதிருந்து, 

முனகுவாரிலும் பேசுமே. 

தன்னைக் காணும் தன்மை ஈந்து,

தவற்றினின்று மீளுமே. 

பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,

பேரறிவாலே ஆளுமே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.