அறிவு!

நாலடி நற்செய்தி…2.

அறிவு!

அன்பின் செயலே அறிவின் சிறப்பு.

அதை அடைய உழைப்போமே.

நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.

நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!

-செல்லையா.

இறையின் தீர்ப்பு!

இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.  

நல்வழி:  

ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,

ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.

வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.

விண்ணின் முடிவு நன்றேயாம்.

கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,

குற்றம் தவிர்ப்பது என்றேயாம்? 

மாண்டபின் பேசிப் பயனேயில்லை.

மனிதா திருந்து, இன்றேயாம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.