அறிய விரும்புவோம்!
நற்செய்தி: யோவான் 8:13-14.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
நல்வழி:
அன்று அவர்கள் அறியவில்லை;
அறிந்து கொள்ள விரும்பவில்லை.
இன்று பலபேர் விரும்பவில்லை.
இதனால் அறிவும் புரியவில்லை.
ஒன்று மட்டும் தெரிந்திடுவோம்.
உண்மை அறிய விரும்பிடுவோம்.
சென்று இயேசுவை நோக்கிடுவோம்;
சிதைக்கும் மடமும் நீக்கிடுவோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.