சான்று!
நற்செய்தி:யோவான் 8:17-18.
நல்வழி:
இருவர் சான்று ஒன்றாய் இருப்பின்
ஏற்றுக் கொண்டது திருச்சட்டம்.
ஒருவர் தந்தை, ஒருவர் மைந்தன்;
ஒன்றாய்த் தருவது இறைத்திட்டம்.
திருடர், பொய்யர், வாக்கை நம்பி,
தேய்ந்து போகுது ஒரு கூட்டம்.
பெருமை விட்டு, தாழ்மை பூண்ட,
பேரொளி அறிவே பரவட்டும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.