சான்று!

சான்று!


நற்செய்தி:யோவான் 8:17-18. 

நல்வழி:   


இருவர் சான்று ஒன்றாய் இருப்பின் 

ஏற்றுக் கொண்டது திருச்சட்டம்.

ஒருவர் தந்தை, ஒருவர் மைந்தன்;

ஒன்றாய்த் தருவது இறைத்திட்டம். 

திருடர், பொய்யர், வாக்கை நம்பி, 

தேய்ந்து போகுது ஒரு கூட்டம். 

பெருமை விட்டு, தாழ்மை பூண்ட,

பேரொளி அறிவே பரவட்டும்!    


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நற்செய்தி…3.

இறையறிவு!

நாலடி நற்செய்தி…3. 


இறையறிவு! 

உம்மாலே  நான், உமக்கென்றே  நான்;

உணர்ந்து வாழ்வதே இறையறிவு. 

இம் மா அறிவை இறையே தருவான்.

இறைவழி வாழ்வே நிறையறிவு!

-செல்லையா.