மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!
நற்செய்தி: யோவான் 8:19.
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
நல்வழி:
பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,
பேதமை இல்லாக் கருத்தவராய்,
கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,
காணாத் தந்தையை, பழிக்கிறோம்.
உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,
ஓவாச் செயலே செய்பவராய்,
வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,
விண் பாராது, முழிக்கிறோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.