விண் பார்ப்போம்!

விண் பார்ப்போம்!

நற்செய்தி: யோவான் 8:23-24

நல்வழி:


கண்ணைக் கட்டி, காட்டில் விட்ட,

கதை போல் வாழும் மானிடா,

எண்ணத் தூய்மை எப்படிப்பட்ட,

இனிமையான தேனடா!

மண்ணைத் தேடின், மண்ணேயாகும்,

மனதின் எண்ணம் தானடா. 

விண்ணைப் பார்த்து, வேண்டு தூய்மை. 

விடியும் வாழ்வு வானடா!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.