அமைதி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:36-37.  

கிறித்துவில் வாழ்வு:  
மாண்டிடும் மனிதக் காட்டினிலே, 
மண்டிக் கிடக்குமே அச்சம். 
தோண்டியெடுத்துப் பார்க்கையிலே,  
தொடர்ந்தும் வருமே மிச்சம். 
வேண்டிடும் அடியார் வீட்டினிலே, 
விளைந்து நிற்குமே அமைதி.  
ஆண்டவர் அருள்வது காண்பதற்கே,   
அழைப்பு ஏற்று வா நீ!  
-ஆமென்.