குருதியின்றி மீட்பு இல்லை!

குருதி கொடாது மீட்பு வராது!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:45-46.

கிறித்துவில் வாழ்வு:  
குருதி கொடாது மீட்பு வராது; 
குறித்துச் சொன்னது திருச்சட்டம். 
இறுதியில் இறையும் மகவாய்ப் பிறந்து, 
இறந்து மீட்பதே இறைத்திட்டம்! 
பெருகிடும் சூது ஒழிக்க முயன்று, 

பேசி வடித்தது திருச்சட்டம்.  
உறுதி மொழியும், உயிரும் ஈந்து,  
உயிர்த்து வருவதே இறைத்திட்டம். 
ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply