குருதி கொடாது மீட்பு வராது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:45-46.
கிறித்துவில் வாழ்வு:
குருதி கொடாது மீட்பு வராது;
குறித்துச் சொன்னது திருச்சட்டம்.
இறுதியில் இறையும் மகவாய்ப் பிறந்து,
இறந்து மீட்பதே இறைத்திட்டம்!
பெருகிடும் சூது ஒழிக்க முயன்று,
பேசி வடித்தது திருச்சட்டம்.
உறுதி மொழியும், உயிரும் ஈந்து,
உயிர்த்து வருவதே இறைத்திட்டம்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.