முன்பே உரைத்தார்!

முன்னர் உரைத்தது நடந்திருந்தும்….
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:25:-27. 

கிறித்துவில் வாழ்வு:  
முன்னே அறிவோர் உரைத்திருந்தும், 
மோசே தொடங்கி வரைத்திருந்தும், 
பின்னே பலரெதிர் பார்த்திருந்தும்,     
பேதமை அடியரில் அகலலையே.  
சொன்னது போன்றே நடந்திருந்தும், 
சொற்படி உயிர்த்தவர் உடனிருந்தும்,  
என்னில மக்களை மீட்டெடுக்கும்,  
இறையறிவின்னும் புகலலையே!  
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.  

நம்பவில்லை!

நம்பவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:22-24.  

கிறித்துவில் வாழ்வு:  
பெண்கள் வாக்கும் கேட்பதில்லை; 
பெரியோர் அறிவும் ஏற்பதில்லை. 
கண்கள் இருந்தும் திறப்பதில்லை. 

காரிருள் நெஞ்சும் சிறப்பதில்லை.  

நண்பா, நம்மிலும் இந்த நிலை. 
நம்ப மறுக்கும் மந்த நிலை.  

பண்பால் சிறப்பது எந்த நிலை?  
பற்றெனப் பற்றும் அந்த நிலை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.