தொட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்!

தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 24:38-40.  
38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.  


கிறித்துவில் வாழ்வு: 


தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

தூயன் உயிர்ப்பு பொய்யன்று . 

கட்டிப் பிடித்துச் சொல்லுங்கள்;  

காணும் காட்சி பொய்யன்று. 

தட்டும் நெஞ்சுள் சொல்லுங்கள். 

தந்தை மைந்தன் மெய்யென்று.  

எட்டுத் திக்கும் சொல்லுங்கள்; 

இயக்கும் ஆவியர் மெய்யென்று.  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply