முன்னுரைத்தது!

அன்றே உரைத்தார்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:41-44. 

44. அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். 

வியந்து மகிழ்ந்து பார்ப்பதுவை,  
விண்ணருட் பற்று என்னாதீர். 
நயந்து ஊனுடை வழங்குவதை, 
நம்புதலென்றும் எண்ணாதீர். 
அயர்ந்து சோர்ந்து போகாதீர்; 
அன்றே உரைத்தார், ஆய்ந்திடுவீர்.   
இயம்பு நூலின் நிறை கண்டு, 
இயேசு மார்பில் சாய்ந்திடுவீர்!
ஆமென்.  

Leave a Reply