முன்பே உரைத்தார்!

முன்னர் உரைத்தது நடந்திருந்தும்….
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:25:-27. 

கிறித்துவில் வாழ்வு:  
முன்னே அறிவோர் உரைத்திருந்தும், 
மோசே தொடங்கி வரைத்திருந்தும், 
பின்னே பலரெதிர் பார்த்திருந்தும்,     
பேதமை அடியரில் அகலலையே.  
சொன்னது போன்றே நடந்திருந்தும், 
சொற்படி உயிர்த்தவர் உடனிருந்தும்,  
என்னில மக்களை மீட்டெடுக்கும்,  
இறையறிவின்னும் புகலலையே!  
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.