எதுவரைக்கும் கடவுளே?

எதுவரைக்கும் கடவுளே?

எப்படி வந்தது நாம் அறியோம்;

எதனால் தொற்றுது என்றறியோம்..

இப்படி எண்ணி வினவுகிறோம்.

ஏன், ஏனோ, விடை இல்லை.

அப்படி வாழும் சூழ்நிலையில்,

ஆண்டவரே இது எதுவரைக்கும்?

தப்ப வைப்பாரிடம் கேட்டறிவோம்;

தரணிக்கு வேறு வழியில்லை!

எதுவரைக்கும் கடவுளே?

எப்படி வந்தது நாம் அறியோம்;

எதனால் தொற்றுது என்றறியோம்..

இப்படி எண்ணி வினவுகிறோம்.

ஏன், ஏனோ, விடை இல்லை.

அப்படி வாழும் சூழ்நிலையில்,

ஆண்டவரே இது எதுவரைக்கும்?

தப்ப வைப்பாரிடம் கேட்டறிவோம்;

தரணிக்கு வேறு வழியில்லை!

-கெர்சோம் செல்லையா.

மன்னிப்பு!

மன்னிப்பு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 17: 3.3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.

கிறித்துவில் வாழ்வு:

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,

அன்பின் உறவில் இணைந்திருந்தும்,

மண்ணின் சொத்து பிரிக்கும்போது,

மனங்கள் ஒன்றாய் இருக்கலையே.

விண்ணின் வாழ்வே வாழ்வு என்று,

வீர முழக்கம் செய்திருந்தும்,

இன்றுவரையில் மன்னிக்கின்ற,

இளகிய நெஞ்சு பிறக்கலையே!

ஆமென்.

இயலாமை!

நோயும் வறுமையும்!
இல்லாமையின் கொடுமைக்கு,
இழுத்துச்செல்லும் தொற்றிற்கு,
நல்லாயனே முடிவெழுதும்.
நம்புகிறோம் கேட்டருளும்.
எல்லாமறிந்த வல்லவரும்,
எதுவும் செய்ய இயலாமல்,
செல்வாக்கின்றிக் கிடக்கின்றார்;
செயலிறையே மீட்டருளும்.
-கெர்சோம் செல்லையா.