எளியர் வாழ வேண்டும்!

எளியரை மீட்கும் ஆட்சி!
தன்னலம் கொண்டு ஆள்வதும் வேண்டாம்;
தவற்றினை விற்று வாழ்வதும் வேண்டாம்.
பொன்பொருள், தரகு வாங்கவும் வேண்டாம்; 
பொது நலன் யாவும் தூங்கவும் வேண்டாம்.


இன்னில எளியர் மீண்டிட வேண்டும்;
இதற்கென நிற்போர் ஆண்டிட வேண்டும்.
அன்னிலை அமைய இறையை வேண்டும்;
அவரது அன்பு நிறைய வேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

எப்போது வரும் இறையரசு?

எப்போது வரும் இறையரசு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:20-21.

20  தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

21  இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

எப்போது இறையின் அரசு வரும்,

என்றிங்கு  யாவரும் கேட்கும்படி,

இப்போது அரசுகள் இருப்பதனால்,

இன்றைக்கே பதில் தெரிவோமே.

தப்பாது வாக்கை நிறைவேற்றும்,

தந்தையின் விருப்பில் நாம் நடந்தால்,

அப்போது இறையும், இறையரசும்,

அகத்தில் வருவது, அறிவோமே!

ஆமென்.