எலிப்பொறி!

பொறிக்குள் விழுந்த எலிகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:26-27.
26  நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

27  நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

கிறித்துவில் வாழ்வு:

நெறிக்குள் வாழ வெறுத்திடுவார்;

நேர்மைப் பேச்சும் மறுத்திடுவார்.

வெறிக்கும் கள்ளை விரும்பிடுவார்;

விடிந்த பின்னும் அருந்திடுவார்.

பொறிக்குள் விழுகிற எலியாவார்

போகும் வழியிலும் பலியாவார்.

பறிக்கப்படுகிற வாழ்வுணர்வார்.

பாவி ஆயினும் மீள்வுணர்வார்!

ஆமென்.