இயலாமை!

நோயும் வறுமையும்!
இல்லாமையின் கொடுமைக்கு,
இழுத்துச்செல்லும் தொற்றிற்கு,
நல்லாயனே முடிவெழுதும்.
நம்புகிறோம் கேட்டருளும்.
எல்லாமறிந்த வல்லவரும்,
எதுவும் செய்ய இயலாமல்,
செல்வாக்கின்றிக் கிடக்கின்றார்;
செயலிறையே மீட்டருளும்.
-கெர்சோம் செல்லையா.