தந்தையின் அழுகை!

தந்தையின் அழுகை!

பிள்ளையை நினைத்து அழுகிற தந்தை, 

புலம் பெயர்ந்தோர் அடைகிற நிந்தை.


தள்ளி ஒதுக்கிடும் தனியார் சந்தை.


தாங்காது நன்மக்கள் சிந்தை.

எள்ளளவாவது இரக்கம் கொண்டு,


எளியரும் இந்தியர் என்று கண்டு,


கொள்ளை போடாச் சீரிய தொண்டு,


கொடுக்குமரசு  எங்கு உண்டு?

-கெர்சோம் செல்லையா.

விதையின் கவிதை!

விதையின் கவிதை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:22-25.

22  பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.

23  இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

24  மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

25  அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணின் ஆட்சி  வேண்டும் நாமும்,

விதையின் பண்பை மறப்பது ஏன்?

தண்ணீர் காணா நிலத்தினுள்ளும்,

தன்னை விதையும் மறைப்பது ஏன்?

மண்ணுள் விதைகள் தாழாவிட்டால்,

மரஞ்செடி, பழங்கள் எங்கு வரும்?

எண்ணும் நாமும் தாழ்மைகொண்டால்,

இறைவனரசு இங்கு வரும்!

ஆமென்.