தொற்று தரும் ஒற்றுமை!

தொற்று தரும் ஒற்றுமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:11-16

11  பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.

12  அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:

13  இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.

14  அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

15  அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

16  அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:

தொற்று வந்து தாக்கும்போது,

தெற்கு வடக்கு நோக்காமல்,

ஒற்றுமையாய் மக்கள் சேர்ந்து,

உதவி செய்வது பார்த்தீரா?

பற்று என்று வந்திடும்போது,

பாவப் பிரிவுகள் பார்க்காமல்,

உற்றாருறவு என்று சேர்க்கும்,

உண்மைப் பற்று ஏற்பீரா?

ஆமென்.