எண்ணடி இறைவாக்கு!


எண்ணடித் தமிழ்ச் சொல்லில்

யான் திருந்த எழுதுகின்றேன்.

பண்ணடா பாட்டு என்றார்;

பழந்தமிழைத் தழுவுகின்றேன்.

மண்ணடி அழைக்கு முன்னர்

மறைவாக்கால் கழுவுகின்றேன்.

விண்ணரசர் ஆளுகின்றார்;

விடுதலையில் தொழுகின்றேன்!


-கெர்சோம் செல்லையா.