செல்லேன்! செல்வேன்!

செல்லேன்! செல்வேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:39-40.
39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
குழி எது, குன்றெது அறியாதவரும்,
கொடுமை, நன்மை புரியாதவரும்,
வழி இது, வாழ்வது தெரியாதவரும்,
வழி காட்டுகிறார், செல்லேனே!
பழி இது, மீள்வது என நன்கறிந்து,
பண்பின் செயலை மட்டும் புரிந்து,
மொழிவது மெய்யோ எனத்தெரிந்து,
மொழிந்தால் அவருடன் செல்வேனே!
ஆமென்.

Leave a Reply