நாள் பார்த்தல்!

நாள் பார்த்தல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:6-7.
6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்ய நாள் பார்க்காதீர்;
நாட்கள் யாவும் நல்லவையே.
இன்பம் பெருக இன்றே செய்வீர்;
இறைவன் தருவார் வல்லமையே.
பன்மை மக்கள் வாழும் நாட்டில்,
பலரது கருத்து வேற்றுமையே.
தன்மை புரிந்து நன்மை செய்வீர்;
தலைக்கனம் தராது ஒற்றுமையே!
ஆமென்.

Image may contain: text

மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!

மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:3-5.
3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டும்,
உதவாதிருத்தல் பெருங்கேடு.
பணம் பொருள் நிறைந்த வீடானாலும்,
பசியாற்றலையேல் சுடுகாடு.
குணம் என்று சொன்னால் கிறித்து போலாம்,
கொடுப்பதின் இன்பம் நீ தேடு.
மணத்தின் அருமை, பிணத்தில் தெரியும்!
மகனே, மகளே, இரங்கிவிடு!
ஆமென்.

Image may contain: 1 person, sitting and text