யாவருக்கும் கொடுத்தலே அன்பு!

யாவருக்கும் கொடுத்தலே அன்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:32-34.

32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்வார் என்று பார்த்து,
நாமும் சிலர்க்குக் கொடுக்கிறோம்.
வன்மம் கொண்டார் வரிசை சேர்த்து,
வாழ்வில் பலரை விடுக்கிறோம்.
என்னே இறையின் விருப்பறிந்து,
இங்கு நன்மை செய்பவர் யார்?
இன்னாராகப் பிரித்தது போதும்;
யாவருக்கும் உதவப் பார்!
ஆமென்.

Image may contain: text