என் முகம் முதுகு தெரியவில்லை!

என் முகம் முதுகு தெரியவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:37.

37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இரண்டு கண்கள் என்முன்னிருந்தும்,
என்முகம், முதுகு தெரியவில்லை.
உருண்டு திரண்டு அவைகள் உழன்றும்,
உடன் நிற்பவரைப் புரிவதில்லை.
முரண்டு பிடிக்கும் எனக்கு வேண்டும்,
முழுமை காட்டும் கண்ணாடி.
பிறண்டி, பிறரைப் பழிக்காத்திருக்க,
பிடிப்பேன் திருமறை முன்னாடி!
ஆமென்.

Image may contain: 1 person

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:35-36.
35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் என்பது, இறைவனின் பண்பு;
இயேசுவில் கண்டேன், இந்த அன்பு.
அரக்கர் என்று, அகற்றுதல் தப்பு;
அனைவரும் இறையின் சாயல் படைப்பு.
சிறக்கும் இந்த தன்மை கொண்டு,
செயல்படுவோர்க்கு வாழ்வு உண்டு.
உருக்கம் பெருக, ஊழியம் பண்ணு;
உள்ளில் அன்பு, இலையேல் மண்ணு.
ஆமென்.

Image may contain: 1 person, sitting, outdoor and water
LikeShow More Reactions