மாற்று சமய மக்கள்!

மாற்று சமய மக்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:
1 அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2 அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
5 அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
மாற்று சமய மக்களும்கூட
மதித்து இயேசுவை நோக்குகிறார்.
ஏற்று அறியும் நெஞ்சற்றோரே,
இழிவாய் ஏசித் தாக்குகிறார்.
தூற்றுகின்றார் என்று வருந்தித்
தொடர்பை முறித்துச் செல்லாதீர்.
காற்று வீசும், கனிவார் அவரும்.
கனவு என்று சொல்லாதீர்!
ஆமென்.

Image may contain: 4 people, including Julius Karunakaran, outdoor
LikeShow More Reactions

Comment