ஓன்று என்று பாரு!
செந்தமிழ் வேறு, எந்தமிழ் வேறு;
சென்னைத் தமிழர் தமிழும் வேறு.
சொந்த ஊரில் மொழிதல் வேறு;
சொன்னால் புரிபவர் இங்கு யாரு?
வந்தவர் உரைக்கும் தமிழ்ச்சொல் வேறு;
வாய்மொழி எழுதின் அதுவும் வேறு.
இந்த நாட்களின் தமிழர் வேறு;
எனினும் ஓன்று, என்று பாரு!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person, outdoor](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/38392103_1944539672243492_7421244621772029952_n.jpg?_nc_cat=0&oh=31a9d5fdc1d1c29f52efec9d6609b767&oe=5BD0B746)