தமிழ் வெள்ளம்!
இன்னும் தூய்மையாய் இருந்திருப்பின்,
என்னைப் போன்றோர் மகிழ்ந்திருப்பார்.
ஒன்றும் குறையாய்க் கூறாமல்,
பொன்னாய் மணியாய்ப் புகழ்ந்திருப்பார்.
என்றாலும் உன் மொழிப்பற்றால்,
வென்றாய் எங்கள் உள்ளத்தை.
நன்றாய்ப் புகழ்வேன் நானுந்தான்,
குன்றா தமிழ் வெள்ளத்தை!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/38732194_1951565821540877_5104824967829127168_o.jpg?_nc_cat=0&oh=278784cfd3fd3ef1432af81ba3912c87&oe=5BC713CD)