ஏழையின் நல்லுயர்வே!

ஏழையின் நல்லுயர்வே!

ஐந்தினைக் கொடுத்து ஐநூறெடுக்கும்,
அரசியல் வித்தகரே,
மந்தைகள்போன்று, மக்களை விற்கும்,
மாபெரும் வர்த்தகரே,
விந்தைகள் புரிந்து, வங்கிகள் ஏய்க்கும்
வேந்தர்கள் நல்லுறவே,
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது,
ஏழையின் நல்லுயர்வே.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

திருவட்டாறு

திருவட்டாறே!

வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: sky, mountain, bridge, outdoor and nature

விடுதலை நாள் விழா!

விடுதலை நாள் விழா!

இரவில் வந்த விடுதலையை,
இன்று பகலில் நினைந்திட்டோம்.
உறவில் வாழும் குடியிருப்பில்,
ஒற்றுமை மழையில் நனைந்திட்டோம்.
சிறகில் வைத்துப் பறப்பதற்கு,
செய்வோம் நற்பணி என்றிட்டோம்.
விரைவில் நாடு வளருமென,
வேண்டி, வீடு சென்றிட்டோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and people standing