வெளியே தெரியா வெறி!
வெளியே சிரித்து, உள்ளே மறைத்து,
வெறித்தனம் கொள்ளும் ஒருகூட்டம்.
தெளிவாய்த் திட்டம் தீட்டுவதாலும்,
தெரியாதிருக்கும் இவ்வட்டம்.
எளிதாய் எவரும் அறியாதிருக்க,
இவர்களுக்கிருக்கும் பல பட்டம்.
புளியாம் இவரை இனிக்க வைக்க,
புரிவோம் அன்பின் திருச்சட்டம்!
-கெர்சோம் செல்லையா.