கிறித்துவுள் முழுக வாரீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:15-16.
15 யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
கிறித்துவில் வாழ்வு:
நீரில் மூழ்கி எழும்பிவிட்டால்,
நேரே விண்ணென எண்ணாதீர்!
பாரில் இப்படி நினைத்துவிட்டு,
பலரை மூழ்கப் பண்ணாதீர்!
போரில் கிறித்தவன் வெல்வதற்கு,
புனித எரிப்பில் முழுகட்டும்.
நேரில் வந்து முழுக்குகின்ற,
நேர்மை வாக்கில் ஒழுகட்டும்!
ஆமென்.
![Image may contain: one or more people, sky, tree, outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/38904806_1955841141113345_9000422376168488960_n.jpg?_nc_cat=0&oh=bcbfc6dd50b43e8d453e7836cd3fca2a&oe=5C0972AE)