கேரள வெள்ளம்

வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.

– கெர்சோம் செல்லையா.

Image may contain: text
 கேரள வெள்ளம்

எவ்வழி தலைவன்?

எவ்வழி தலைவன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:19-20.
19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்து கொள்ளப்பட்டபோது,
20 தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.

கிறித்துவில் வாழ்வு:
எவ்வழி தலைவர் செல்கின்றாரோ,
அவ்வழிதானே தொண்டரும் செல்வர்.
செவ்வழி எதுவென அறியாத் தலைவர்,
சேர்க்கும் இடமோ படுகுழி, சொல்வர்!
இவ்வகைத் தலைவர்கள் இருப்பதனால்தான்,
இன்று நம்நாட்டில் எதற்கும் பஞ்சம்.
ஒவ்வொரு மனிதரும் இதனைப் புரிந்தால்,
ஒழுகும் ஆறாய் ஒழுக்கம் மிஞ்சும்!
ஆமென்.

Image may contain: one or more people, shoes and text
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
Posts