வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.
– கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/39453101_1968595043171288_5329836376026251264_n.jpg?_nc_cat=0&oh=16c8c44d1f833b5e4d812e12f5c0ec62&oe=5BF2F4FF)
The Truth Will Make You Free
வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.
– கெர்சோம் செல்லையா.
எவ்வழி தலைவன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:19-20.
19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்து கொள்ளப்பட்டபோது,
20 தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
கிறித்துவில் வாழ்வு:
எவ்வழி தலைவர் செல்கின்றாரோ,
அவ்வழிதானே தொண்டரும் செல்வர்.
செவ்வழி எதுவென அறியாத் தலைவர்,
சேர்க்கும் இடமோ படுகுழி, சொல்வர்!
இவ்வகைத் தலைவர்கள் இருப்பதனால்தான்,
இன்று நம்நாட்டில் எதற்கும் பஞ்சம்.
ஒவ்வொரு மனிதரும் இதனைப் புரிந்தால்,
ஒழுகும் ஆறாய் ஒழுக்கம் மிஞ்சும்!
ஆமென்.