தாய் தந்தை நினைவிடம்!

தாய் தந்தை நினைவிடம்!


கட்டிட வடிவில் கல்லறை கட்டி,


காண்போர் புகழுரை கூட்டாமல்,

எட்டடி கீழே இருப்பவை உடல்கள்,

என்பதும் எழுதி மாட்டாமல்,

மட்டிலா அன்பு மகிழ்வாய் ஈந்த


மனங்களுக்காகக் கட்டியுள்ளோம்.

தொட்டிட இயலாத் தொலையிருந்தாலும்,

தூயோர் கூட்டைக் காட்டுகிறோம்.


-செல்லையாவின் பிள்ளைகள்.

இயேசு இல்லா படகு!

இயேசு இல்லா படகு!

நற்செய்தி: யோவான் 6:16-18.

16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17. படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். 18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.

நல்வழி:

தன்னினம் காக்கும் தலைவன் இல்லை;

தாயகம் வருந்தி வாடும்.

என்னரும் இறையும் என்னுடன் இல்லை.

என்போர் நிலையும் ஆடும்.

இன்னின்ன வழியே போக வேண்டும்,

என்கிற இயேசுவைக் கூடும்!

அன்பினில் விளையும் அமைதி வேண்டும்;

அருள்கிற அவரைப் பாடும்!

ஆமென்.

8Thompsonjoseph Jebathilak, Vinutha JeganNathan and 6 others3 Comments1 ShareLikeCommentShare