இயேசு இல்லா படகு!

இயேசு இல்லா படகு!

நற்செய்தி: யோவான் 6:16-18.

16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17. படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். 18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.

நல்வழி:

தன்னினம் காக்கும் தலைவன் இல்லை;

தாயகம் வருந்தி வாடும்.

என்னரும் இறையும் என்னுடன் இல்லை.

என்போர் நிலையும் ஆடும்.

இன்னின்ன வழியே போக வேண்டும்,

என்கிற இயேசுவைக் கூடும்!

அன்பினில் விளையும் அமைதி வேண்டும்;

அருள்கிற அவரைப் பாடும்!

ஆமென்.

8Thompsonjoseph Jebathilak, Vinutha JeganNathan and 6 others3 Comments1 ShareLikeCommentShare

Leave a Reply