அரசனின் விருப்பு!

அரசனாக விரும்பா அரசன்!
நற்செய்தி: யோவான் 6:14-15.

நல்வழி:


அப்பமும் மீனும் யார் தருவாரோ,

அவரே அரசன் எனப் பார்க்கும், 

இப்புவி மாந்தர் இயலா நிலையில்,

இறைமகன் செய்ததை எண்ணுங்கள்.

எப்படிப் பிறரை அடக்குவதென்ற,

எகிறும் ஆணவம் கொள்ளாமல்,

ஒப்புமை இல்லா மேன்மையான, 

உதவும் பணியே பண்ணுங்கள்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.