மாற்றம் தேவை!

மாற்றம் தேவை, ஊழியரில் மாற்றம் தேவை!


ஆறுதல் அளிக்கிற ஆவியர்தான்,

அறிவிக்கிறார், தெரிவிக்கிறார்.

மாறுதல் விரும்பும் அவரேதான்;

மாற்றுகிறார், மன மாற்றுகிறார்.

கூறுதல் நம் பணி என்பதில்தான்,

குழம்பி, பலபேர் தவறுகிறார்.

ஏறுதல் எங்கே? குரிசில் தான்;

இவ்வறிவுள்ளோர், மாற்றுகிறார்!


-கெர்சோம் செல்லையா.