தாய் தந்தை நினைவிடம்!

தாய் தந்தை நினைவிடம்!


கட்டிட வடிவில் கல்லறை கட்டி,


காண்போர் புகழுரை கூட்டாமல்,

எட்டடி கீழே இருப்பவை உடல்கள்,

என்பதும் எழுதி மாட்டாமல்,

மட்டிலா அன்பு மகிழ்வாய் ஈந்த


மனங்களுக்காகக் கட்டியுள்ளோம்.

தொட்டிட இயலாத் தொலையிருந்தாலும்,

தூயோர் கூட்டைக் காட்டுகிறோம்.


-செல்லையாவின் பிள்ளைகள்.

Leave a Reply