எதைச் செய்தாலும்!

எதைச் செய்தாலும்!   

எதைச் செய்தாலும் இறைவனுக்கென்றே, 
எண்ணிச் செய்வீர் நண்பரே.  
இதைச் சொல்லுகிற அடியனும் நன்றே, 
எண்ண வேண்டும் அன்பரே. 
விதைக்கிற விதையைச் செடி மரமாக்கி,  
விளையச் செய்பவர் தெய்வமே. 
புதைக்கிறத் தொழிலாய், பொய் விதைக்காது,  
புனிதம்  நட்டால் உய்வமே!  
-செல்லையா. 

வாக்கு வடிவெடுத்தது!

வாக்கு வடிவம் எடுத்தது!
நற்செய்தி: யோவான் 1:14.
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
நல்வழி:

வாக்காய் ஒலித்து வழிநடத்தியயென்
வானின் அருளே, வாய்மையே,
நோக்காதிருந்த மாந்தர் கண்முன்
நுழைந்தாய் இயேசு வடிவிலே.
நீக்காதிருப்போர் ஐயம் இனியேன்?
நீங்கச் செய்வாய் மாண்பிலே.
தேக்காதிருந்த மாட்சியை அடியேன்,
தேடினேன் உனது மடியிலே!
ஆமென்.
-செல்லையா.