உழைப்பாளர் நாள் வாழ்த்து!

உழைப்பாளர் நாள் வாழ்த்து!  


எதனை உழைப்பெனச் சொல்கின்றார்? 

ஏய்ப்பவர் கொள்ளை அடிப்பதையா? 

இதனை இன்றையோர் சேர்த்ததினால்,

ஏழையர் கண்ணீர் வடிக்கலையா? 

புதனை சனியெனச் சொல்கின்றார்  

புரியும் தீமைக்கு முடிவிலையா?

அதனை மாற்றுவீர், அறிஞர்காள்,  

அடிபடும் நெஞ்சு துடிக்கலையா? 


-கெர்சோம் செல்லையா. 

காத்திருப்போம்!

காத்திருப்போம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா: 24:49.  

கிறித்துவில் வாழ்வு:  
பணியொன்றைத் தொடங்கும் நாம், 

பல்வகை அறிவு நாடுதல் போல்,  

அணி சூட்டும் இறைப்பணியில்

ஆவியின் அருளைப் பார்த்திருப்போம். 

பிணி நீக்கும் திருப்பணியில், 

பிழைகள் வராமல் இருப்பதற்கு,  

துணிவை நாம் கேட்டிடுவோம்;  

தூயன் காலடி காத்திருப்போம்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.