என்னிறைவன்!

என்னிறைவன்!
அன்பு,அறிவு, ஆற்றல், அமைதி, 
அனைத்தும் நிறைந்தவர் என்னிறைவன். 
உண்மை, ஒழுக்கம், நேர்மை, தாழ்மை,
ஒன்றிலும் குறையார் என்னிறைவன். 
பண்பின் வடிவம் ஒருவரில் கண்டேன்; 
படைத்தருள்கிறார்  என்னிறைவன்.  
நன்மை செய்தல் வாழ்வெனச் சொல்லி, 
நானிலம் ஆள்கிறார்  என்னிறைவன்! 
-செல்லையா.

பிள்ளைப் பேறு!

நல்வழி:  
பற்றும் உறுதி இல்லாதவனாய்,   
பன்னிரு ஆண்டுகள் நானலைந்தேன்.
சற்றும் நேர்மை புரியாதவனாய்,     
சகதியில் விழுந்து சீர்குலைந்தேன்.  
சுற்றம் உணர, சூழ்நிலை வெல்ல, 
சொல்லொளி காட்டி எனையிழுத்தார். 
முற்றும் மீட்டு முழுவாழ்வளிக்க, 
முதலில் பிள்ளை என்றழைத்தார்!  
ஆமென்.
-செல்லையா.