எதைச் செய்தாலும்!

எதைச் செய்தாலும்!   

எதைச் செய்தாலும் இறைவனுக்கென்றே, 
எண்ணிச் செய்வீர் நண்பரே.  
இதைச் சொல்லுகிற அடியனும் நன்றே, 
எண்ண வேண்டும் அன்பரே. 
விதைக்கிற விதையைச் செடி மரமாக்கி,  
விளையச் செய்பவர் தெய்வமே. 
புதைக்கிறத் தொழிலாய், பொய் விதைக்காது,  
புனிதம்  நட்டால் உய்வமே!  
-செல்லையா. 

Leave a Reply