உன்னை அறிவாய்!

தன்னை அறியும் அறிவு! 

நற்செய்தி: யோவான் 1:19-20. 

முன்னம் நிற்போர் தன்மை அறிந்தோம்;  
முழு வரலாறும் இயல்பும் அறிந்தோம்.  
என்னென்ன குறையோ யாவும் அறிந்தோம்;  
எல்லாம் விற்று வாங்கவும் அறிந்தோம்.  
இன்னில வாழ்வின் பொருளை அறிவோம். 
என் செயவேண்டும் என்றும் அறிவோம்.  
தன்னை அறியும் அறிவை அறிவோம். 
தன் குறையறிந்தால், இறையும் அறிவோம்!  
ஆமென்.
-செல்லையா.