ஒளி!

ஒளி!
நற்செய்தி வாக்கு: யோவான் 1:4-5. 
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 
நல்வழி பாட்டு: 
இருளாயிருக்கும் இப்புவியெங்கும், 

இறையே ஒளியாய் இருக்கின்றார். 

அருளாயதனை நமக்கு ஈந்தும், 

அறிவில்லாதார் வெறுக்கின்றார். 

ஒருநாளேனும் உண்மை உணர்வார்;

உலகம் ஒளியை வெல்லாது. 

பொருளாயிதனைப் பாடி வடிப்பேன்; 

புனைந்துரைத்தல் இல்லாது! 


ஆமென். 


-செல்லையா.