பிள்ளைப் பேறு!

நல்வழி:  
பற்றும் உறுதி இல்லாதவனாய்,   
பன்னிரு ஆண்டுகள் நானலைந்தேன்.
சற்றும் நேர்மை புரியாதவனாய்,     
சகதியில் விழுந்து சீர்குலைந்தேன்.  
சுற்றம் உணர, சூழ்நிலை வெல்ல, 
சொல்லொளி காட்டி எனையிழுத்தார். 
முற்றும் மீட்டு முழுவாழ்வளிக்க, 
முதலில் பிள்ளை என்றழைத்தார்!  
ஆமென்.
-செல்லையா. 

Leave a Reply