உழைப்பாளர் நாள் வாழ்த்து!

உழைப்பாளர் நாள் வாழ்த்து!  


எதனை உழைப்பெனச் சொல்கின்றார்? 

ஏய்ப்பவர் கொள்ளை அடிப்பதையா? 

இதனை இன்றையோர் சேர்த்ததினால்,

ஏழையர் கண்ணீர் வடிக்கலையா? 

புதனை சனியெனச் சொல்கின்றார்  

புரியும் தீமைக்கு முடிவிலையா?

அதனை மாற்றுவீர், அறிஞர்காள்,  

அடிபடும் நெஞ்சு துடிக்கலையா? 


-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply