சொர்க்கம் நாடும் பண்டிதர்கள்!

‘சொர்க்கம்’ நாடும் ‘பண்டிதர்கள்’!


பக்கத்து வீட்டில் சாவு என்றால்,

பார்க்க மறுக்கும், ‘பண்டிதரே’,

இக்கட்டு நாளில் உதவிய இவரை,

எப்படி மறக்கும் மண்புதரே?

கக்கத்தில் இடுக்கிய காய் நட்டிருப்பின்,

கனிகள் பெருகிப் பயன் தருமே.

‘சொர்க்கத்தின்’ கதவைப் பூட்டுகிறீரே

சொற்படி வாரும், நலம் வருமே!


கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com