அஞ்ச வேண்டாம்!

எதிரியா? எங்கே?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:14.

14  அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
முன்னே புகழும் மனிதர்தான்,
முதுகில் குத்துவார், நம்பாதீர்.
இன்னாள் இவர்கள் பெருகுவதால், 
எப்படி வாழ்வீர்? ஏங்காதீர்!
பின்னே , முன்னே நமைக் காக்கும், 

பெரும்படை  இறைவன் இருப்பதனால்,
என்னேரம் எவர் எதிர்த்தாலும்,
ஏன்தான்  கவலை? வாங்காதீர்!
ஆமென்.