உள்ளில் தூற்றுகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:6-7.
6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
தீமை விட்டுத் திரும்பிக் கொண்டால்,
தெய்வம் ஏற்றுக் கொள்கின்றார்.
ஊமை நெஞ்சு உள்ளோர் கண்டால்,
உள்ளில் தூற்றிச் செல்கின்றார்.
சீமை நாட்டுச் செல்வம் என்றால்,
சிறகு விரித்துப் பறக்கின்றார்.
ஆமை போன்று அடங்கி நின்றால்,
அரிய மீட்பில் சிறக்கின்றார்!
ஆமென்.