ஓதுவீர் அன்பையே!

யார் செய்தாலும், நன்மை நன்மையே;

எவர் கையாயினும், தீமை தீமையே.

பார் உய்வாகும், பயிலும் உண்மையே.

பரவும் மெய்யால், பதறும் பொய்மையே.

தேர் ஒட்டுதற்கும், தேவை திறமையே;

தேடா நாட்டார், தெரிந்தார் குறைவையே.

ஊர் போட்டியிலும் ஓதுவீர் அன்பையே;

உணர்வார் கேட்பார், ஒழிப்பீர் துன்பையே!


-கெர்சோம் செல்லையா.